Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நான்கு மற்றும் ஐந்து வகுப்புகள் கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு (2023- 2024 ம் கல்வி ஆண்டு) இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் மற்றும் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் வேலு,வட்டாரக் கல்வி அலுவலர் கௌரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்து பயிற்சியின் நோக்கங்கள் பற்றி விளக்கம் அளித்தார்கள்.
தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் பாடத்தில் புதிய இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 61 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.